நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஐயனார் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் 27-ஆம் தேதி வரை 12 நாள்கள் சித்திரைப் பெரு விழா நடைபெறுகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஆர். சுகுமார், ஆய்வர் ஏ. ரமணி, செயல் அலுவலர் டி. அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!

தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்எல்! அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொகிதீன்!
விடியோக்கள்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்


