சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சதுரங்கவல்லபநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:46 am IST

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஐயனார் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 வரும் 27-ஆம் தேதி வரை 12 நாள்கள் சித்திரைப் பெரு விழா நடைபெறுகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஆர். சுகுமார், ஆய்வர் ஏ. ரமணி, செயல் அலுவலர் டி. அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.