ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவாரூரில் மின்சார வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், இந்த கோரிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
மத்திய அமைப்பின் கிளைத் தலைவர் ஆர். ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் டி. கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், கிளைச் செயலர் வி. சுப்ரமணியன், நிர்வாகிகள் கே. ராஜேந்திரன், ஆர். கண்ணன், ரமணி, வினோத் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
