காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இணையதள வசதி செய்து தர வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.10-ஆம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் கருப்புப் பட்டை அணிந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.
மன்னார்குடியில்...
மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பா. சற்குணம் தலைமை
வகித்தார்.
இதில், மன்னார்குடி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் மற்றும் கூத்தநால்லூர் வருவாய் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு கைகோர்த்து நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








