சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

மன்னார்குடி கோயிலில் இராப்பத்து 7-ஆம் நாள் வழிபாடு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உத்ஸவத்தின் 7-ஆம் நாள் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:12 am IST

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உத்ஸவத்தின் 7-ஆம் நாள் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி டிச.8-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கியது. டிச.18-ஆம் தேதி நடைபெற்ற பரமபத வாசல் திறப்புக்கு பிறகு, இராப்பத்து உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதன் 7-ஆம் நாளான திங்கள்கிழமை ருக்மணி, சத்யபாமா சமேதராக உத்ஸவர் ராஜகோபால சுவாமி கல்யாணத் திருக்கோல அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் மன்னார்குடி வி. திருநாவுக்கரசு பிள்ளை மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.