நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, திருவாரூரில் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் மாநில விவசாயத் தொழிலாளரணி செயலர் வீ. மோகன் தலைமை வகித்தார். இதில் மாநில மகளிர் பாசறை செயலர் கோ. செந்தமிழ்செல்வி பங்கேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.