எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தகவல் பரிமாற்ற மையம் திறப்பு

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:19 pm

DIN

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தகவல் பரிமாற்ற மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் செயல்படுத்தப்படும் திட்ட விவரங்கள், திட்டம் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பரிமாற்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால் திறந்து வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.