காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஆசாத், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
டெல்டா மாவட்டங்களில் 51 லட்சம் விவசாயக் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காலம் தாழ்த்திய மத்திய அரசை கண்டிப்பது, கார்ப்பரேட் நலன்களுக்காகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகிய கனிம வளங்களை எடுக்கும் முயற்சிகளுக்காகவும் துணைப் போகும் மத்திய அரசை கண்டித்து, மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

