முத்துப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த முத்துப்பேட்டை, கல்கேணி தெருவைச் சேர்ந்த அப்துல் மாலிக் (33) என்பவர், அண்மையில் வெளிநாட்டில் இருந்துவிட்டு சொந்த ஊருக்கு வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார்அவரை கைது செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அப்துல்மாலிக்கை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதற்காக, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் கணபதி, காவலர் சிவசங்கரன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் பாராட்டுத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

