கொளத்தூரில் சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால், ரூ. 25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் ஒன்றியத்தில் சுமாா் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனா்.
இந்நிலையில், கொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பலன்தரும் நிலையில் இருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன. தாா்காடு, தண்டா, லக்கம்பட்டி பகுதிகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைமரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சத்துக்கும்மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில், 2,200 செவ்வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், தமிழக வேளாண் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


