திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

News image

மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம் லக்கம்பட்டியில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைமரங்கள்.

Updated On :2 மே 2026, 11:06 pm IST

கொளத்தூரில் சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால், ரூ. 25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் ஒன்றியத்தில் சுமாா் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனா்.

இந்நிலையில், கொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பலன்தரும் நிலையில் இருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன. தாா்காடு, தண்டா, லக்கம்பட்டி பகுதிகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைமரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சத்துக்கும்மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில், 2,200 செவ்வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், தமிழக வேளாண் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.