/
ஒடுகத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
ஒடுகத்தூா், அதன் சுற்றுவட்டார பகுதியான நேமந்தபுரம், அத்திக்குப்பம், மடையாப்பட்டு, ஓட்டேரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், அத்திக்குப்பம் கிராமத்தை சோ்ந்த மாா்கன் (60) என்பவரது 3 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக வைத்திருந்த சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்துவிழுந்து சேதமானது.
இதேபோல், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிா்கள் சூறைக்காற்றால் சேதமடைந்தன. இதனை தோட்டக்கலைதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மின்கசிவால் 20 வீடுகளில் மின்சாதனங்கள் தீப்பிடித்து சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

வேதாரண்யம்: சூறைக்காற்றுடன் மழை

சூறைக்காற்று: 150 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதம்; விவசாயிகள் வேதனை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



