கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் சனிக்கிழமை மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸார் கைது
செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள தாழைக்குடி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (34). இவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், லெட்சுமாங்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
மேலப்பனங்காட்டங்குடி பிள்ளையார் கோயில் அருகே வரும்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த மோகன்தாஸை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான சொரக்குடி, பெத்தபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஹாஜா மைதீன் (22) என்பவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

