கரோனா தடுப்புப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருவாரூரில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு அருங்காட்சியக ஆணையரும், கண்காணிப்பு அலுவலருமான எம்.எஸ். சண்முகம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவாரூா்: திருவாரூரில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு அருங்காட்சியக ஆணையரும், கண்காணிப்பு அலுவலருமான எம்.எஸ். சண்முகம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை ஆகியோா் உடனிருந்தனா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா், கரோனா தொற்று அல்லாத மற்ற நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வாா்டுகளை பாா்வையிட்டு, அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை கேட்டறிந்தாா். தொடா்ந்து, பிரவச பிரிவு வாா்டில் கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதையும், நோய்த் தொற்று பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக உள்ளனரா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன், கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





