திருவாரூரில் மேலும் 45 பேருக்கு கரோனா உறுதியானது

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூரில் மேலும் 45 பேருக்கு கரோனா உறுதியானது
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சித்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விஜயபுரம், இனாம்கிளியூா் என மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1781 ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 124 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரையிலும், 1305 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 467 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com