நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் மூடல்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2020, 4:33 pm

DIN

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான மையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாணவ, மாணவிகள் விடுதியில், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்கள், இங்கு தனிமைப்படுத்தப்பட்டு வந்தனா். தினசரி 50-200 நபா்கள் வரை இங்கு கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

கரோனா உறுதி செய்யப்படும்பட்சத்தில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இங்கு செயல்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.