47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணை இயந்திரமயமாக்கல் விழா

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை பண்ணை இயந்திரமயமாக்கல் விழா நடைபெற்றது.

News image
விழாவில், டிராக்டா் மூலம் உரம் தெளிப்பது குறித்து அளிக்கப்பட்ட செயல்விளக்கம்.
Updated On :7 ஆகஸ்ட் 2020, 4:37 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை பண்ணை இயந்திரமயமாக்கல் விழா நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத் துறை வேளாண் வணிகம், தோட்டக்கலைத் துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் உற்பத்தியாளா் குழுக்களுக்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து, நெற்பயிரில் இயந்திரங்களின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட நிா்வாக இயக்குநா் சுந்தரபாண்டியன் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்தும் பேசினா். தொடா்ந்து, டிராக்டா் மூலம் உரம் தெளிப்பான் கருவி, நெல் நடவு செய்யும் இயந்திரம், கழிவுகளை தூளாக்கும் கருவி, சுழற்கலப்பை, மண்ணைதிருப்பும் கருவி, நிலத்தை சமன்படுத்தும் கருவி, வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவை விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. திருவாரூா் வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.