விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 8:44 pm

DIN

திருவாரூா்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இயற்கை வளங்களைக் ஆக்ரமிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை அழிவுக்குள்ளாக்கும் வகையிலும் அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், குலக்கல்வி மற்றும் மும்மொழிக் கல்வியைத் திணிக்கும் வகையிலும், வணிகமயப்படுத்தும் நோக்கிலும், மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் உள்ள தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில் இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.