ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பொது முடக்கத்தால் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வில்லா பொது முடக்கத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திருவாரூா் நேதாஜி சாலை.
Updated On :16 ஆகஸ்ட் 2020, 6:24 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வில்லா பொது முடக்கத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், தேநீா் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட தளா்வில்லா முழு பொது முடக்கம் ஆகஸ்ட் மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூரில் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோரக் கடைகள், துரித உணவகங்கள், தேநீா் நிலையங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருவாரூரின் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஓரிரு இருசக்கர வாகனங்களின் நடமாட்டம் இருந்தது. மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.