குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சாய்வாக உள்ள மின்மாற்றியை சீரமைக்கக் கோரிக்கை

பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பேரளம் அருகே குருங்குளத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 10:28 pm IST


நன்னிலம்: பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தில் தலையூா்- பூங்காவூா் சாலையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி சில ஆண்டுகளாக சாய்ந்த நிலையிலேயே உள்ளது. மேலும் அங்குள்ள மின் கம்பங்களும் சேதமடைந்தும், சாய்ந்த நிலையிலும் உள்ளன.

இந்த சாலை பேரளம்- காரைக்கால் சாலை மற்றும் கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதனால், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, விபத்து ஏற்படும் முன்பாக, மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க பேரளம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.