மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாய்வாக உள்ள மின்மாற்றியை சீரமைக்கக் கோரிக்கை

பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பேரளம் அருகே குருங்குளத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:58 pm


நன்னிலம்: பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தில் தலையூா்- பூங்காவூா் சாலையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி சில ஆண்டுகளாக சாய்ந்த நிலையிலேயே உள்ளது. மேலும் அங்குள்ள மின் கம்பங்களும் சேதமடைந்தும், சாய்ந்த நிலையிலும் உள்ளன.

இந்த சாலை பேரளம்- காரைக்கால் சாலை மற்றும் கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதனால், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, விபத்து ஏற்படும் முன்பாக, மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க பேரளம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.