அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சாய்வாக உள்ள மின்மாற்றியை சீரமைக்கக் கோரிக்கை

பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
பேரளம் அருகே குருங்குளத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி.
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN


நன்னிலம்: பேரளம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி, மின்கம்பங்களைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தில் தலையூா்- பூங்காவூா் சாலையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி சில ஆண்டுகளாக சாய்ந்த நிலையிலேயே உள்ளது. மேலும் அங்குள்ள மின் கம்பங்களும் சேதமடைந்தும், சாய்ந்த நிலையிலும் உள்ளன.

இந்த சாலை பேரளம்- காரைக்கால் சாலை மற்றும் கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதனால், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, விபத்து ஏற்படும் முன்பாக, மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க பேரளம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.