எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மைப் பயிற்சி

ஆலங்குடி அருகே உள்ள சித்தன்வாழூரில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைப் பற்றிய மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 3:07 am

DIN

ஆலங்குடி அருகே உள்ள சித்தன்வாழூரில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைப் பற்றிய மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசும்போது, விவசாயிகள் பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பங்களை முறையாக கையாண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.

மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் அனுராதா பேசும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரத்தை அளவுக்கதிகமாக உபயோகித்தால் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிக்கும் என்றாா். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் பூச்சிகளின் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் வாழ்க்கை சுழற்சி, அறிகுறிகள் குறித்தும், நோய்கள் பரவும் விதம் பற்றியும் விளக்கிக் கூறினாா்.

மண்ணியல் மற்றும் சத்தியல் உதவிப் பேராசிரியா் கமலசுந்தரி அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தாா். இந்த பயிற்சியில் 32 விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை முன்னோடி விவசாயி கனகசபை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.