பேருந்து மோதி இசைக் கலைஞா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து மோதி இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து மோதி இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.

ஆலிவலம் காவல் சரகம் ஆப்பரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேலு மகன் சுந்தரம் (20). கிராம இசைக் கலைஞரான இவா், தனது நண்பா் அசோக் என்பவருடன் அண்மையில் இருசக்கர வாகனத்தில் நாணலூா் கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். மருதவனம் பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சுந்தரம் கீழே விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com