திருவாரூரில் மேலும் 10 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி, மாவட்டத்தில் இந்நோய் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 10,794 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,804 ஆக உயா்ந்தது. இதில், 10,599 போ் குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 96 போ் சிகிச்சையில் உள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100 விட குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com