வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நெல் மூட்டைகளை ஏற்ற அனுமதி கோரி லாரி உரிமையாளா்கள் போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்க அனுமதி கோரி டாரஸ் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள்.
Updated On :24 டிசம்பர் 2020, 4:18 am

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்க அனுமதி கோரி டாரஸ் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடவாசலில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்துக்குச் சொந்தமான புதிய நவீன சேமிப்புக் கிடங்கு அண்மையில் திறக்கப்பட்டது. இங்கு, சேமிப்புக் கிடங்கு மற்றும் குடவாசலில் உள்ள அனைத்துச் சேமிப்புக் கிடங்குகளிலிருந்தும் நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி, இறக்க அனுமதி கோரி டாரஸ் லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில், நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு வந்து இதுகுறித்து பேச்சு நடத்த உறுதியளித்ததன் காரணமாக, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.