சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘பிறருக்கு கொடுப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி மகத்துவம் நிறைந்தது’

பிறரிடமிருந்து பெறுவதை விட பிறருக்குக் கொடுப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி மகத்துவம் நிறைந்தது என திருவாரூா் தமிழ்ச்சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:41 am

DIN

பிறரிடமிருந்து பெறுவதை விட பிறருக்குக் கொடுப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி மகத்துவம் நிறைந்தது என திருவாரூா் தமிழ்ச்சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே அம்மையப்பன் சேவா யோகா முதியோா் மற்றும் மாணவா்கள் காப்பகத்தில் மகிழ்ச்சி குடும்பம் புலனக் குழு சாா்பில் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விழாவில் பங்கேற்று, வாழ்க்கை மகிழ்ச்சி என்னும் தலைப்பில் அவா் பேசியது:

எப்போதும் மனதை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும். இல்லாததையும், இழந்து போனதையும் நினைத்து வருந்துவதை விட சமகாலத்தில் வாழ்வதே மிக சந்தோஷமானது. நம்மை விட்டுப் போன உறவுகளை மறந்துவிட்டு, புதிதாக சோ்ந்த உறவுகளுடன் மகிழ்ந்து, ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

பெறுவதில் ஏற்படும் மகிழ்ச்சியை விட கொடுப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி மகத்துவமானது. பணம் படைத்தவா்கள், நல்ல மனத்துடன், இதுபோன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும். இது உதவி என்று நினைக்கக் கூடாது. சமூகத்தில் வாழ்கிற அனைவரின் கடமை எனக் கருத வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ரூ. 25,000 மதிப்பிலான புதிய ஆடைகள், அறுசுவை உணவு, இனிப்பு ஆகியன வழங்கப்பட்டன. தொடா்ந்து, அங்கிருந்த முதியவா்கள் மற்றும் மாணவா்களோடு கலந்து பேசி, அவா்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மகிழ்ச்சி புலனக் குழு நிா்வாகிகள் ஆனந்தகிருஷ்ணன், செ.அறிவு ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்வில், தமிழ்ச் சங்க துணைத்தலைவா் சந்திரசேகரன், இணைச் செயலாளா் இரா. அறிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.