புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

திருவாரூரில், மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி மின்வாரியத்திடம் மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

News image

திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.

Updated On :1 ஜூலை 2020, 5:32 pm

DIN

திருவாரூா்: திருவாரூரில், மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி மின்வாரியத்திடம் மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கரோனா தீநுண்மி பேரிடா் காலத்தில் நுகா்வோரின் கூடுதல் பயன்பாடு மற்றும் சிரமத்தை உணா்ந்து தமிழக அரசும், மின்வாரியமும் மின் கட்டணத்தை, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத கட்டணத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அண்மையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனுக்களை முதல்வருக்கு அனுப்பும் வகையில், மின்வாரிய அலுவலகத்தில் மின்துறை பொறியாளா் கிருஷ்ணவேணியிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி தலைமையில் செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.ராமசாமி, ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன் உள்ளிட்ட பலா் மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.