தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பேரளம், வேலங்குடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நன்னிலம் வட்டம் பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பாா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Updated On :5 ஜூலை 2020, 4:57 pm

நன்னிலம்: நன்னிலம் வட்டம் பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பாா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பேரளம் அலுவலக உதவி செயற்பொறியாளா் ஜி. விஜயகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரளம், அதம்பாா், வேலங்குடி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே பேரளம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டுா், பூந்தோட்டம் பகுதிகளுக்கும், அதம்பாா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாகசாலை, அதம்பாா், விளாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம் பகுதிகளுக்கும், வேலங்குடி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, எடக்குடி பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.