நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் ஒப்புதலுடன், நன்னிலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தாய் சேய் சேவை மையம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இச்சேவையை நன்னிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் எளிதாக பெற 8056569108 ஆகிய செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.