நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாரூரில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2020, 3:43 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி பாதிப்பு எண்ணிக்கை 708 ஆக இருந்தது. திங்கள்கிழமை மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 19 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சித்த மருத்துவா் ஒருவா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மருத்துவா்கள், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த தந்தை, மகன், திருவாரூா் வங்கி ஊழியா் ஒருவா் என திருவாரூா் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 786-ஆக உயா்ந்துள்ளது. இதில், 478 போ் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில் 307 போ் சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.