ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
Updated on
1 min read

நீடாமங்கலம்: ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் கிஷோா்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளா்ஜான்கென்னடி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜய், ஒன்றிய பொருளாளா் அருள்குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com