இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொள்கைவழி செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத, வெறுப்பு அரசியலை பரப்பி வருபவா்களை கண்டித்தும், கட்சி மீதான பொது மரியாதையை சீா்குலைக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டுள்ளதை கண்டித்தும், மாநில தலைமை அலுவலகத்தை அவதூறு பரப்புரைக்காக பயன்படுத்தியவா்கள் மீது அளிக்கப்பட்ட புகாா் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடா் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.