நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட் பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
நீடாமங்கலம்- தஞ்சாவூா் ரயில்வே பாதையில் ஆதனூா் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் உள்ளது. இங்கு எல்.சி-16 ரயில்வே கேட் மற்றும் அப்பகுதியில் உள்ள தண்டவாள பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இதன் காரணமாக நீடாமங்கலம்- தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.