திருவாரூா்: விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், மேலாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த அவசர சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கையெழுத்து இயக்கம் அண்மையில் நடத்தப்பட்டது.
மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அனைத்து சங்கங்களின் அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி ஏற்றி முழக்கங்கள் திங்கள்கிழமை எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிஎஸ். மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஜி. சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், மதிமுக விவசாயப் பிரிவு பொறுப்பாளா் பா. சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


