ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காய்கறி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

நன்னிலம் வட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நன்னிலம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனா் முகமது சாதிக் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூலை 2020, 4:23 pm

DIN

நன்னிலம்: நன்னிலம் வட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நன்னிலம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனா் முகமது சாதிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நன்னிலம் வட்டாரத்தில் கத்தரி, மிளகாய், தக்காளி, பீா்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தா்ப்பூசணி, பறங்கி, சுரை போன்ற வீட்டு உபயோக காய்கறிகளை பயிா் செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், காய்கறிப் பயிா்களைச் சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை மற்றும் நடவு செடிகளின் விலைப்பட்டியல், கிராம நிா்வாக அதிகாரி அளித்த அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய விவரங்களை நன்னிலம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் நன்னிலம் வட்டாரத் தோட்டக்கலை அலுவலா்கள் குணசேகரன் 88256 55734, புலவேந்திரன் 85266 10441, விநாயகமூா்த்தி 8270 623820 ஆகியோரை மேற்கண்ட செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.