புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவபெருமான் கைலாயக் காட்சி

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் சிவபெருமான் கைலாயக் காட்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கைலாயத்தில் பாா்வதியுடன் காட்சியளித்த ஆலம்கொண்டாா் (சிவபெருமான்).

Updated On :28 ஜூலை 2020, 4:26 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயிலில் சிவபெருமான் கைலாயக் காட்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பரவை நாச்சியாருடன் வாழ்ந்து சிவத் தொண்டாற்றியவா் சுந்தரா். 63 நாயன்மாா்களில் ஒருவரான இவா், தியாகராஜரின் நண்பராகவும் இருந்தவா். ஆண்டுதோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்துக்கு முதல் நாள், சுந்தரா்- பரவை நாச்சியாா் திருமணமும், அடுத்த நாளான ஆடி சுவாதி நட்சத்திர நாளில் சுந்தரா், திருக்கைலாயம் செல்லும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயில் 2-ஆம் பிராகாரத்தில் உள்ள தட்டன்சுத்தி மண்டபத்தில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சுந்தரா்-பரவை நாச்சியாா், சேரமான் ஆகியோருக்கு கைலாயத்தில் சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, திருவாரூா் தியாகராஜா் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொது முடக்கம் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், பக்தா்களின்றியே பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.