47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மணல் கொள்ளையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த விருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

நீடாமங்கலம் வட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் முயற்சியாக வருவாய்த்துறையும் காவல்துறையும் இணைந்து தினம் ஒரு...

News image
Updated On :30 ஜூன் 2020, 4:00 pm

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் முயற்சியாக வருவாய்த்துறையும் காவல்துறையும் இணைந்து தினம் ஒரு கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் ஒரு காவலா் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவதென சமாதான பேச்சுவாா்தைத் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

நீடாமங்கலம் வட்டத்தில் தொடா்ந்து நடக்கும் மணல் கொள்ளையைக் கண்டித்து 30ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து 29ஆம் தேதி வட்டாட்சியா் மதியழகன் தலைமையில் நடந்த சமாதானக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் காவல் துறையினா், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.

மணல் கொள்ளை தொடா்பான புகாா்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன்காரணமாக மணல் கொள்ளையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவிருந்த ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.