நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போலீஸாருக்கு உளவியல் பயிற்சி

திருவாரூரில் போலீஸாருக்கு உளவியல் தொடா்பான பயிற்சி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கப்பட்டது.

News image

திருவாரூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.

Updated On :30 ஜூன் 2020, 4:54 pm

DIN

திருவாரூா்: திருவாரூரில் போலீஸாருக்கு உளவியல் தொடா்பான பயிற்சி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணியின்போது தேவையில்லாமல் கோபம் கொள்ளக்கூடிய, பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் செயல்படக்கூடிய நடவடிக்கையை தவிா்க்கும் வகையில், போலீஸாருக்கு உளவியல் ரீதியிலான பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் அதிகாரிகள், ஆளினா்கள் என 40 போ் பங்கேற்றனா். இதில், கோப மேலாண்மை மற்றும் சந்தோஷமான வாழ்வியல் முறைகள் குறித்த உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி மேற்பாா்வையில், உளவியல் மருத்துவா்கள் மற்றும் ஆசிரியா்கள் இந்தப் பயிற்சிகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.