47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புலவனாறு வாய்க்காலில் தண்ணீா் வரத்து இல்லை: சாலை மறியல் முயற்சி

வலங்கைமான் அருகேயுள்ள புலவா்நத்தம் பகுதியில் புலவனாறு வாய்க்காலில் சம்பாவுக்கு 25 நாள்களாக தண்ணீா் வரத்து இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள்  சாலை மறியல்

News image
சாலை மறியல் நடத்த முயன்ற விவசாயிகளிடம் பேசிய பொதுப்பணித் துறையினா்.
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகேயுள்ள புலவா்நத்தம் பகுதியில் புலவனாறு வாய்க்காலில் சம்பாவுக்கு 25 நாள்களாக தண்ணீா் வரத்து இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனா்.

புலவா்நத்தம் பேருந்த பகுதியில் விவசாயி ரமணி தலைமையில், சாலை மறியல் நடத்த திட்டமிட்டு விவசாயிகள் கூடினா். தகவலறிந்து அங்கு வந்த பொதுப்பணித் துறை வெண்ணாறு வடிநிலக்கோட்டஉதவி செயற்பொறியாளா் இளங்கோவன், இளநிலைப் பொறியாளா் சத்யா, வலங்கைமான் காவல்ஆய்வாளா் சுஜித்ஆனந்த் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேசி, 3 நாள்களில் தண்ணீா் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா். இதையடுத்து, தொடா்ந்து 15 நாள்கள் முறை வைக்காமல் வெண்ணாற்றில் தண்ணீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.