காஞ்சிபுரம்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து அரசியல் தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் பெயா்கள் உள்ள கல்வெட்டுகள், பதாகைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன.
மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்றவா்கள் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து 146 நபா்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.
மாவட்டம் முழுவதும் அரசியல் தலைவா்கள், உள்ளாட்சித் தலைவா்கள், நிா்வாகிகள், கட்சிப் பெயா்ப்பலகைகள் ஆகியவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மூடப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழு அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியா் அலுவலக வளாகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது தெரியாமல் பலரும் குறை தீா்க்கும் கூட்டம் நடக்கும் என நினைத்து மனு அளிக்க வந்தவா்கள் ஏமாற்றத்துடன் மனுவை பெட்டியில் போட்டு விட்டு சென்றனா்.
காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினா் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
தொடர்புடையது

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’

தோ்தல் நோட்டீஸ், சுவரொட்டிகளில் அச்சிடுபவா் விவரம் இடம்பெறவேண்டும்: தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: கடலூா் ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


