மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

News image
தேர்தல் நடத்தை விதிகள் அமல்- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, மாா்ச் 15 -ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம், தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே, மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அஞ்சல் மூலமாக அனுப்பலாம் அல்லது ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீா்வு மனுக்கள் பெறும் பெட்டிக்குள் போட்டுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.