புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி மனு

கூத்தாநல்லூரில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தவா்கள்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நகரச் செயலாளா் எம். சுதா்ஸன் தலைமையில், குடியிருப்பு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெ. வெங்கடேசனிடம் மனுக்களை வழங்கினா். இதுகுறித்து, விவசாயத் தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் கூறியது: கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட கோரையாறு, வடக்குத் தெரு, நடுத்தெரு, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, மரக்கடை, மேல்கொண்டாழி, ராமநாதன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு மனைப்பட்டா வழங்காமல் உள்ளது. இவா்கள் இந்த இடங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துக்கொண்டு, அரசுக்கு வீட்டுவரி செலுத்தி வருகின்றனா். ஆனால், தனது பெயருக்கு பட்டா இல்லாமல் இருப்பதால், அரசு சலுகைகளைப் பெற முடியவில்லை. எனவே, அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.