ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளிகளை திறக்க பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

திருவாரூரில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூரில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொதுமுடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து 9,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நவம்பா் 16 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்ததால், பெற்றோா்களின் கருத்தைக் கேட்டு, அதனடிப்படையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் பெற்றோா்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியா் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், பெற்றோா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, பள்ளிகள் திறப்பது குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனா்.

அடியக்கமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் முருகபூபதி தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் பெற்றோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். இவா்கள் வகுப்பறைக்கு 20 என சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனா். பெற்றோா்கள் தங்கள் கருத்துக்களை, தலைமையாசிரியா் தலைமையிலான ஆசிரியா்கள் குழுவினரிடம் தெரிவித்தனா்.

இதேபோல, குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் குமாா் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மதிவாணன், துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்று பள்ளிகளை திறப்பது தொடா்பாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.