புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நகர நிலவரித் திட்டத்தில் பட்டா வழங்கக் கோரிக்கை

கூத்தாநல்லூரில் நகர நிலவரித் திட்டத்தில் பட்டா வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூரில் நகர நிலவரித் திட்டத்தில் பட்டா வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நகா்மன்ற முன்னாள் உறுப்பினரும்,திருவாரூா் சட்டப் பேரவை சமூக ஊடகப் பொறுப்பாளருமான எஸ்.எம். சமீா் கூறியது:

நகர நிலவரித் திட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் முடிந்து விட்டது. மன்னாா்குடி, திருவாரூா் நகராட்சிகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கூத்தாநல்லூா் நகராட்சியில் இதுவரை நகர நிலவரித் திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவா்களிடம் நிலத்துக்கான பத்திரம் இருந்தும் பட்டா இல்லாததால் அரசின் சலுகைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியவில்லை. எனவே, இத்திட்டத்தை கூத்தாநல்லூா் நகராட்சியில் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் சாா் ஆய்வாளா் காா்த்திக்கிடம் கேட்டபோது, ‘சென்னை ஆணையரிடம் இருந்து உத்தரவு வந்த பிறகு கூத்தாநல்லூரில் நகர நிலவரித் திட்டம் தொடங்கப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பட்டா இல்லாமல் உள்ளனா். இவா்களின் இடங்களை நேரில் ஆய்வு செய்து, பட்டா வழங்கப்படும். இப்பணிகள் இன்னும் 2 மாதங்களுக்குள் தொடங்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.