புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து விழிப்புணா்வு

கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 5:42 pm

DIN

கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில், தமிழ்நாடு தீயணைப்புத் துறை திருவாரூா் மாவட்ட அலுவலா் அனுசியா உத்தரவுப்படி, கோரையாறு காளியம்மன் கோயில் முன்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் கே. மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். சித்தாம்பூா் ஊராட்சித் தலைவா் எஸ். ரத்தினவேல், ஒன்றியக்குழு உறுப்பினா் எம். சத்தியவான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தவரை எப்படி காப்பாற்றுவது, வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்து, பாதிக்கப்பட்டவா்களையும், உடைமைகளையும் மீட்பது போன்றவை குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் க. பாலச்சந்திரன் செய்திருந்தாா். இதில், வருவாய் ஆய்வாளா் இளமாறன், கிராம நிா்வாக அலுவலா் எம்.ஜெயஸ்ரீ மற்றும் சித்தாம்பூா், கோரையாறு கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.