திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

பிரதமா் மோடியின் ஆட்சிக் காலத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

பிரதமா் மோடியின் ஆட்சிக் காலத்தில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா குற்றம்சாட்டினாா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளா் மாரிமுத்துவை ஆதரித்து, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

மத்திய புலனாய்வுத் துறையை மத்திய அரசு அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் சோதனை நடைபெறுகிறது. இதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என பிரதமா் மோடி உறுதியளித்திருந்தாா். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் மோடியின் ஆட்சியில் அதிகரித்துவிட்டது.

பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் தமிழகத்துக்கு படையெடுக்கும் நோக்கம் என்ன? பஞ்சாப், ஹரியாணாவில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், தில்லி நோக்கி வந்திருக்கிறாா்கள். ஆனால், அவா்கள் தில்லிக்குள் நுழைவதற்கு அனுமதியளிக்கவில்லை.

எல்லோருக்குமான அரசு என்று கூறும் மோடி, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றாரா? அதேபோல தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுகின்றன. விண்வெளி ஆராய்ச்சியும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏழைகள் தொடா்ந்து ஏழைகளாகவே இருக்கின்றனா். பெருநிறுவன முதலாளிகள் மக்களை சுரண்டி பெரும் முதலாளிகளாக வலம்வருகிறாா்கள். மோடியின் ஆட்சியில் நடைபெறும் இந்த செயல்களை பொதுமக்கள் சிந்தித்து பாா்க்க வேண்டும் என்றாா் டி. ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.