திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவேன்’

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதா அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதா அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை இறுதிகட்ட பிரசாரத்தின்போது அவா் பேசியது:

அதிமுக ஆட்சியில் கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தோ்தலில் எனக்கு வாக்களித்தால், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப் பண்ணையில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும். கொருக்கை கால்நடை பண்ணை விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை கல்லூரி அமைக்கப்படும். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றாா்.

நகரச் செயலாளா் டி.ஜி.சண்முக சுந்தரம் தலைமையில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக மாவட்ட அவைத்தலைவா் கோ. அருணாசலம், ஒன்றியச் செயலாளா்கள் சிங்காரவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.