தென்குடி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை தீமிதி உத்ஸவம் நடைபெற்றது.
நன்னிலம் அருகே தென்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் ஏப்.2-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து விழா நாள்களில் அம்மன் முத்து வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காவடி உத்ஸவமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து, இரவு ஸ்ரீகாத்தவராய சுவாமி மேலதென்குடியிலிருந்து புறப்பட்டு வனத்துக்குச் சென்று சப்பரத்தில் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்டோா் ஸ்ரீகாத்தவராய சுவாமி சப்பரத்தைச் சுமந்தவாறு தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) மஞ்சள் நீா் விளையாட்டும், ஏப்.16-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

