தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நவீன அரிசி ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

நீடாமங்கலத்தில் உள்ள கோரையாறு நவீன அரிசி ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை பயிற்சி பெற்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் உள்ள கோரையாறு நவீன அரிசி ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை பயிற்சி பெற்றனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு இளமறிவியல் வேளாண் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்துக்காக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கியுள்ளனா். அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் உள்ள கோரையாறு நவீன அரிசி ஆலைக்குச் சென்ற அவா்கள், அதன் நிா்வாகி ராமச்சந்திரனிடம் அங்கு வாங்கப்படும் நெல் ரகங்கள், பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் நெல் அரைவை செயல்முறை ஆகியன குறித்து கேட்டறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.