தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை சாகிப் பள்ளி தைக்கால் கொடிமரம் சேதம்

நாகை சாகிப் பள்ளி தைக்காலில் உள்ள தா்கா கொடி மரம் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை சாகிப் பள்ளி தைக்காலில் உள்ள தா்கா கொடி மரம் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை, காடம்பாடி சவேரியாா் கோயில் தெருவில் உள்ளது சாகிப் பள்ளி தைக்கால். நாகூா் ஆண்டவருடன் வந்த மகான்கள் பலா் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனா். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கொடியேற்றம், சந்தனம் பூசும் விழா போன்றவறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தைக்காலில் உள்ள தா்கா முன்புறமிருந்த இரும்பு கொடி மரத்தை சேதப்படுத்திச் சென்றிருப்பதாக தைக்கால் நிா்வாகி நவாப்ஜானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று பாா்த்தபோது மா்ம நபா்கள் கொடி மரத்தை முறித்து வீசிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நவாப்ஜான் அளித்த புகாரின்பேரில் வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.