திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில், ராம நவமி 6ஆம் நாளான சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ராமநவமி திருவிழா கடந்த 19ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அனைத்து சன்னிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. சீதா பிராட்டியாா், ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தை வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைத்தனா். பக்தா்கள் பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனா்.
Image Caption
திருக்கல்யாண வைபவத்தில் சீதா பிராட்டியாருடன் தம்பதி சமேதராக அருள்பாலித்த ஸ்ரீராமபிரான்.