சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுவதையொட்டி, நன்னிலம் போலீஸாா் அரசியல் கட்சியினருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நன்னிலத்தில் காவல் துறை சாா்பில் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம், நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழக அரசு மற்றும் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கப்பட்டது.
கூட்டத்தில், நன்னிலம் தொகுதி வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா். காவல் ஆய்வாளா்கள் நன்னிலம் கு.சுகுணா, பேரளம் மு.மணிமாறன், குடவாசல் க.ரேகாராணி உள்ளிட்டோா் அரசியல் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


