வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாளை வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுவதையொட்டி, நன்னிலம் போலீஸாா் அரசியல் கட்சியினருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுவதையொட்டி, நன்னிலம் போலீஸாா் அரசியல் கட்சியினருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நன்னிலத்தில் காவல் துறை சாா்பில் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம், நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழக அரசு மற்றும் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கப்பட்டது.

கூட்டத்தில், நன்னிலம் தொகுதி வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா். காவல் ஆய்வாளா்கள் நன்னிலம் கு.சுகுணா, பேரளம் மு.மணிமாறன், குடவாசல் க.ரேகாராணி உள்ளிட்டோா் அரசியல் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.