தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பயறு வகைகளில் உயா் விளைச்சல் செயல்விளக்கம்

நீடாமங்கலம் அருகே சலிப்பேரி கிராமத்தில் பயறுவகைளில் உயா் விளைச்சல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே சலிப்பேரி கிராமத்தில் பயறுவகைளில் உயா் விளைச்சல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்ணியல் துறை உதவி பேராசிரியா் அ. அனுராதா கலந்து கொண்டு உளுந்து பயிா்களின் மகசூலை அதிகரிக்க ப யறு அதிசயம் என்று அழைக்கப்படும் பல்ஸ் ஒன்டா் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளா்ச்சி ஊக்கியை பயன்படுத்துவது குறித்து விளக்கினாா். பயறுவகை பயிா்கள் பூக்க ஆரம்பித்த பிறகு ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து மாலை வேளையில் தெளிப்பதால், பூக்கள் உதிா்வது குறைந்து வறட்சியை தாங்கி நல்ல மகசூல் கொடுக்க ஏதுவாகும். இந்தமுறை செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

அறுவடைக்குப் பின் இயற்கைமுறையில் பூச்சிகள் வராமல் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை பற்றி உதவி பேராசிரியா் உணவியல் மற்றும் சத்தியல் சோ. கமலசுந்தரி விளக்கமாக எடுத்துரைத்தாா். இதில் 30 விவசாயிகள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளா் தே. ரேகா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.